தஞ்சை:

பழனி முருகன் கோயில் சிலை மோசடி வழக்கில் ஸ்தபதி முத்தையாவின் 2வது ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

பழனி தண்டாயுதபாணி மலைக்கோயில் 200 கிலோ உற்சவர் சிலை செய்ததில் ரூ. 1.31 கோடி மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஸ்தபதி முத்தையாவை சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

ஏற்கனவே ஜாமின் கோரி தாக்கல் செய்திருந்த மனுவை தஞ்சை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உடல்நிலையை காரணம் காட்டி முத்தையா தாக்கல் செய்த 2வது ஜாமின் மனுவும் 5 மணி நேர விசாரணைக்கு பின்னர் இன்று தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.