வெண்ணிலா வீடு, சோன்பப்படி, டீக்கடை ராஜா, விசிறி, நிழல் உலகம், ரிங் ரோடு (கன்னடம்), ரகு, கீழக்காடு ஆகிய திரைப்படங்களின் இசையமைப்பாளர் தன்ராஜ் மாணிக்கம். நூற்றுக்கும் மேற்பட்ட குறும் படங்களுக்கும், விளம்பரப் படங்களுக்கும் இசை அமைத்துள் ளார். இவர் இயற்கை மனிதனுக்கு எச்சரிக்கை விடுவது போன்ற பாடலுக்கு இசை அமித்திருக்கிறார்.
“நீயே பிரபஞ்சம்” என்ற அந்த ஒற்றைப் பாடல் முயற்சி பற்றி அவர் கூறியதாவது:
பல வகையிலும் இயற்கைக்கு எதிராக மனிதர்கள் இருக்கிறோம். இறைவன் இயற்கையையும் உயிரினங்களை யும் படைத்தான். மனிதன் படைத்தவனை உதாசீனப்படுத்தி, இயற்கையையும் உயிரினங் களையும் கொடுமை செய்கிறான், கொலை செய்கிறான், மாசு படுத்துகிறான், தான் இயற் கையுடன் சார்ந்து வாழ்வதை மறந்து, செயற்கை வழியில் சென்று மிருகமாக மாறி விட்டான்.அனைத்து உயிர்களுக்கும் இயற் கைக்கும் அநீதி செய்கிறான். அப்படிப்பட்ட மனிதனை இன்று பாடாய்படுத்துகிறது.
தற்போது உலகமே முடங்கி கிடக்கிறது.

 

மனித உயிர் இனங்களைத் தவிர மற்ற உயிரினங்கள் அனைத்தும் மிக மகிழ்ச்சி யாய், சுதந்திரமாய் இன்புற்று வாழ்கின்றன. தற்போது வந்திருக்கும் கொரோனா, மனித இனத்திற்கு ஓர் எச்சரிக்கை. தன்னிலை மறந்த மனிதனுக்கு, அதிரவைக்கும் ஒரு நினைவூட்டல். இனிவரும் காலங்களுக்கு இயற்கைக்குத் துணையாக மனித இனம் நிச்சயம் இருக்கும்.
தற்போது நான் இசையமைத்திருக்கும் இந்த பாடல், மேலே கூறிய அனைத்து கருத்துகளும் உள்ளடங்கியது.” என்கிறார்.
‘நீயே பிரபஞ்சம்’ என்கிற தலைப்பில் இதற்கான பாடல் வரிகளை பாடலாசிரியர் எஸ். ஞானகரவேல் எழுதி இருக்கிறார்.
‘வானமாய் நின்று கையசைத்தேன்
பூமியால் உன்னை நான் அணைத்தேன்
பச்சை இலைகளில் புன்னகைத்தேன்
சென்றாய் என்னை புறக்கணித்தே’ என்று தொடங்குகிறது பாடல் .
‘கடவுளை நீ தினம் தேடியே அலைகிறாய் எங்கோ?
இயற்கையும் தெய்வமும் ஒன்றென நீ உணரும் நாள் என்றோ ?என்று செல்கிற இப் பாடல்,
‘நீர் நிலம் காற்று நான்,
ஆகாயம் நெருப்பு நான் ,
பேரண்ட வெளிச்சம் நான்,
பிரபஞ்ச இருட்டும் நான்’ என்று விரிந்து செல்கிறது.
டிரெண்ட் மியூசிக் இப்பாடலின் உரிமைகளைப் பெற்றுள்ளது. மனிதனுக்கு தற்போது மிக அவசியமான கருத்துப் பாடல். “என்கிறார் திருப்தியுடன். ச. ஞானகரவேல் பாடல் எழுதி உள்ளார். மனோஜ் முருகன் பாடல் மையக்கருத்து மைத்திருகிறார். படத் தொகுப்பு:ராம் கோபி. தயாரிப்பு: டிஎம் புரொடக்சன்ஸ்