முசாபர்நகர்:

பாரதியஜனதா ஆளும் உ.பி.யில் 16வயது சிறுமிக்கு மாட்டு மாமிசம் கொடுத்து சாப்பிட வைத்து தொர்ந்து பலாத்காரம் செய்து வந்த தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக வந்த அந்த சிறுமியை 4 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று, அவளுக்கு கட்டாயப்படுத்தி மாட்டு கறி கொடுத்து சாப்பிட வைத்து, அவரை தொடர்ந்து 10 நாட்கள் மாறி மாறி வன்புணர்வு செய்து வந்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

உ.பி. முசாபர்நகரில் உள்ள குக்ரா கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் 16 வயதான சிறுமி தனது உறவினர் வீட்டுக்கு செல்ல பஸ்சை எதிர்பார்த்து காத்திருந்தார். அப்போது, அந்த  அந்த வழியாக காரில் சென்ற, அதே ஊரை சேர்ந்த, அக்ரம், அஸ்லாம், ஆயுப் மற்றும் சலீம் ஆகிய நால்வரும், தாங்கள் முசாபர்நகர் செல்வதாகவும், அங்கு இறக்கி விடுவதாகவும் கூறி, அந்த சிறுமியை காரில் ஏற்றி  அழைத்து சென்றுள்ளனர்.

தனது ஊரை சேர்ந்தவர்கள் என்ற தைரியத்தில் அவர்களுடன் சென்ற அந்த சிறுமியை, அந்த 4 பேரும் சேர்ந்து, அவளின் கண்களை துணியால் கட்டி கடத்திச்சென்று ஒரு இடத்தில் தங்க வைத்துள்ளனர்.
10 நாட்கள் அங்கேயே தங்க வைத்து அவளுக்கு மாட்டுக்கறி மாமிசம் கொடுத்து உண்ண வைத்து,, பலமுறை பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.

அதன்பிறகு, அவளை ஊர் எல்லையில் விட்டுவிட்டு சென்றுவிட்டனர். இதுகுறித்து அந்த சிறுமி,  தன் பெற்றோரிடம் கூறி, கதறி அழுதாள். தொடர்ந்து முசாபர்நகர் போலீசிலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இந்து பெண் ஒருவரை இஸ்லாமிய இளைஞர்கள் கடத்திச்சென்று கற்பழித்தது மட்டுமல்லாமல், அவளை மாட்டுக்கறி உண்ண வைத்த சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.