திருவனந்தபுரம்:

முஸ்லிம்களின் உடைகளை களைந்தால் அடையாளம் தெரியும் என்று பேசிய கேரள மாநில பாஜக தலைவர் பிஎஸ்.ஸ்ரீதரன் பிள்ளைக்கு கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.


பாலக்கோட் விமான தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர் என்று காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் மத்திய அரசை கேட்டு வருகின்றனர்.

பாதுகாப்பு விசயம் என்பதால் தெரிவிக்க முடியாது என மத்திய அரசு கூறிவருகிறது.

இந்நிலையில், காங்கிரஸுக்கும், இடது சாரிகளுக்கும் பதில் அளிக்கும் வகையில், கேரள மாநிலம் அட்டிங்கல்லில் நடந்த தேர்தல் பேரணியில் பேசிய ஸ்ரீதரன் பிள்ளை, எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள், அதில் எத்தனை இந்துக்கள், எத்தனை முஸ்லிகள் என்று கேள்வி கேட்கின்றனர்.

எப்படி அடையாளம் காண முடியும்? ஆடையை களைந்து பார்த்தால், முஸ்லிம் என்று தெரிந்து கொள்ளலாம் என்று கூறியிருந்தார்.

இதற்கு காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் தரப்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஸ்ரீதரன் பிள்ளையின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்திடம் இடதுசாரிகள் புகார் கொடுத்துள்ளனர்.

இதற்கிடையே, தாம் அவ்வாறு பேசவில்லை என ஸ்ரீதரன் பிள்ளை மறுத்துள்ளார். இது இமாலய பொய் என்று கூறிய அவர், முஸ்லிம்களுக்கு எதிராக அவ்வாறு தாம் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை என்றார்.