இந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிப்பு 71ஆக உயர்வு… மத்திய சுகாதாரத்துறை தகவல்..
டெல்லி: இந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 71ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் இருந்து பரவிய உருமாறிய கொரோனா வைரஸ், இந்தியா உள்பட உலக நாடுகளிலும் பரவியுள்ளது தெரிய வந்துள்ளது. இது கொரோனா பரவலின் 2வது அலை என்றும், முந்தைய தொற்று பரவலைவிட 70 சதவிகிதம் அதிகமான வேகத்தில் பரவி வருவதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, யுகே, ஜெர்மனி போன்ற நாடுகளில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் புதிய வகையிலான உருமாறிய கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது.