சம்பல்:

த்திரபிரதேசம் மாநிலத்தில் மூன்று முறை, ‘தலாக்’ கூறி விவாகரத்து செய்த கணவனுக்கு, ஊர் பஞ்சாயத்து, இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

இஸ்லாமிய மதத்தினரிடையே ல், மனைவியை, மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை புழக்கத்தில் இருக்கிறது. . இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.  தவிர தலாக் குறித்த விவாதங்கள் நாடு முழுதும் நடந்து வருகிறது.

இந்த நிலையில், உ.பி., மாநிலம், சம்பல் பகுதியில், 45 வயது இஸ்லாமிய ஆண் ஒருவர், 22 வயது  இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.  மணம் செய்த பத்து நாட்களில்  இருவருக்கிடையே சண்டை  ஏற்பட்டது.  உடனே அந்த நபர், மூன்று முறை தலாக் கூறி, மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக, வீட்டுக்கு அனுப்பிவிட்டார்.

இதை எதிர்த்து, அந்த பெண்ணின் உறவினர்கள், ஊர் பஞ்சாயத்தில் முறையிட்டனர். அங்குள்ள மதரசாவில், ஊர் பஞ்சாயத்து கூடியது; 52 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

‘அந்த நபர், விசாரணை ஏதுமின்றி, உடனடியாக தலாக் கூறி விவாகரத்து செய்ததாக கூறியதை ஏற்க முடியாது’ என்று, பஞ்சாயத்து அறிவித்தது;  மேலும் அவருக்கு, இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது. தவிர  அந்த பெண் வரதட்சணையாக கொண்டு வந்த பொருட்களை திருப்பிக் கொடுக்கவும் உத்தரவிட்டதோடு,  அந்த பெண்ணிற்கு, 60 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படியும் பஞ்சாயத்து  தீர்ப்பளித்தது.