சென்னை: இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு, ‘800’ என்ற பெயரில் படமாகிறது. இந்த படத்தில், முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில், நடிகர் விஜய்சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் 800 திரைப்படத்தில்இருந்து விலகிக்கொள்ளுமாறு முத்தையா முரளிதரன் நடிகர் விஜய் சேதுபதிக்கு அறிவுறுத்திஉள்ளார். அதற்கு விஜய் சேதுபதி நன்றி தெரிவித்து உள்ளார்.
இயக்குனர் பாரதிராஜா உள்பட பல திரையுலக பிரமுகர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பாரதிராஜா வெளியிட்ட அறிக்கையில், விஜயேசேதுபதி, மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது ரொம்பக் கடினம். ஆனால் பொதுமக்கள் வெகு வேகமாகவே உங்கள் மீது அன்பைக் கொட்டியுள்ளனர். தாங்கள் செய்யவிருக்கும் 800 என்ற படம் பற்றிக் கேள்விப்பட்டேன். விளையாட்டு வீரனாக என்னதான் சாதித்தாலும், தன் சொந்த மக்கள் கொல்லப்பட்டபோது சிரித்து மகிழ்ந்தவர் முத்தையா முரளிதரன், அவர் என்ன சாதித்து என்ன பயன்? எத்தனையோ துரோகங்களை எம்மினம் கடந்து வந்துள்ளது. எங்களைப் பொருத்தவரை முத்தையா முரளீதரனும் ஒரு நம்பிக்கைத் துரோகிதான் என காட்டமாக தெரிவித்திருந்தார்.
இந்த படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதில் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது. இதையடுத்து, கடந்த வாரம் முத்தையா முரளிதரன் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், இது நாள் வரை என் வாழ்க்கையில் பல சர்ச்சைகளை கடந்தே வந்துள்ளேன் அது விளையாட்டானாலும் சரி தனிப்பட்ட வாழ்க்கையானாலும் சரி. தற்போது எனது வாழ்க்கை வரலாற்று படமான திரைப்படத்தை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் அதற்கான சில விளக்கங்களை கூற விரும்புகிறேன். என்னை பற்றிய திரைப்படம் எடுக்க நினைப்பதாக கூறி தயாரிப்பு நிறுவனம் என்னை அணுகியபோது முதலில் தயங்கினேன். பிறகு முத்தையா முரளிதரனாக நான் படைத்த சாதனைகள் என்னுடைய தனிப்பட்ட சாதனைகள் மட்டும் இல்லையென்பதாலும் இதற்கு பின்னால் எனது பெற்றோர்கள் என்னை வழிநடத்திய ஆசிரியர், எனது பயிற்சியாளர்கள் சக வீரர்கள் என பலராலும் உருவாக்கப்பட்டவன் என்பதாலும் அதற்கு காரணமானவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என நினைத்து தான் இந்த திரைப்படத்தை உருவாக்க சம்மதித்தேன் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளார். அதில், விஜய்சேதுபதி 800 படத்தில் இருந்து விலகிக்கொள்ளுமாறு அறிவுரை கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது சுயசரிதை படமான 800 திரைப்படத்தை சுற்றி தமிழ்நாட்டில் சிலரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சர்ச்சைகள் காரணமாக இந்த அறிக்கையை வெளியிடுகிறது