சிட்னி: கிரிக்கெட்டின் வகைப்பாட்டிற்கு ஏற்ப தனது பேட்டிங் ஸ்டைல் மாறும் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் துணைக் கேப்டன் கேஎல் ராகுல்.

ரோகித் ஷர்மா இல்லாத நிலையில், ஒருநாள் & டி-20 போட்டிகளுக்கு, இந்திய அணியின் துணைக் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார் கேஎல் ராகுல்.

இவர், நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை அடித்தவர் என்ற பெருமையைப் பெற்றார்.

இந்நிலையில், தனது பேட்டிங் குறித்து கூறியுள்ளதாவது, “எந்த வகையான கிரிக்கெட்டில் இந்திய அணி விளையாடுகிறதோ, அதற்கேற்ப அமையும் எனது பேட்டிங். கடந்த ஒருநாள் தொடரில், நான் 5வது இடத்தில் களமிறங்கினேன். அணி, எனக்கு என்ன வாய்ப்பை அளக்கிறதோ, அதை அனுபவித்து செய்வது எனது வழக்கம்.

நான் அதிகளவில் ஒருநாள் போட்டிகளை விளையாடியிருக்கவில்லை. சில ஆண்டுகளாகத்தான் அணியில் வாய்ப்பைப் பெற்றுள்ளேன். அணியில் தற்போது வாய்ப்பு கிடைத்ததை மகிழ்ச்சியாக உணர்கிறேன்” என்றுள்ளார் ராகுல்.