கொரோனா ஊரடங்கினால் எந்தவொரு படப்பிடிப்புமே நடைபெறவில்லை. இதனால் பிரபலங்கள் தங்களுடைய சமூக வலைதள பக்கங்கள் மூலமாக கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
ஒரு சில நடிகர்கள் தாங்கள் செய்யும் அன்றாட வேலைகள் , டிக் டாக் , பாட்டு , நேரலை என சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி வருகிறார்கள்.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கில் தான் 11 கதை தயார் செய்துள்ளதாக இயக்குனர் மிஷ்கின் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
அவர் கூறும்போது, “இந்த ஊரடங்கில் 11 கதைகளை தயார் செய்து வைத்துள்ளேன். இதனைப் படமாக்கவும் விரும்புகிறேன், ஒவ்வொன்றாக நிச்சயம் வெள்ளித்திரைக்கு வரும். மேலும் அஞ்சாதே படம் பார்த்துவிட்டு சிம்பு, என் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.” என்று கூறினார்.
‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘பிசாசு’, ‘துப்பறிவாளன்’, ‘சைக்கோ’ உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை கொடுத்தவர் மிஷ்கின் என்பது குறிப்பிடத்தக்கது .