சென்னை :

தினகரன் ஆதரவு மாநிலங்களவை எம்பிக்கள் 3 பேரை தகுதி நீக்கம் செய்ய கோரி மாநிலங்களவை செயலாளர் தீபக் வர்மாவிடம் ஓபிஎஸ், இபிஎஸ் அணி சார்பாக  மைத்ரேயன் எம்.பி. மனு அளித்துள்ளார்.

ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப்பெறுவதாக கவர்னரிடம் கடிதம் கொடுத்ததாக, அதிமுக கொறடாவின் அறிவுறுத்தலின் பேரில் சபாநாயர் தனபால் எம்எல்ஏக்கள் 18 பேரை  தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதுகுறித்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், டிடிவிக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் மேல்சபை எம்.பி.க்களான விஜிலா சத்யானந்த் , நவநீத கிருஷ்ணன், கோகுல கிருஷ்ணனை ஆகியோரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்த கடிதத்தை அதிமுக எம்.பி. மைத்ரேயன் மாநிலங்களவை செயலாளர் தீபக் வர்மாவிடம் மனு கொடுத்துள்ளார்.

இதன் காரணமாக அதிமுகவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.