வாஷிங்டன்:

அமெரிக்காவில் ஆழ்கடல் நீச்சல் விளையாட்டின் போது புலி சுறா தாக்கியதில் இந்திய வம்சாவளி பெண் உயிரிழந்தார்.

அமெரிக்காவின் கோஸ்டா ரிக்கா தீவுக்கு கடந்த 2 தினங்களுக்கு 18 பேர் அடங்கிய குழுவினர் ஆழ்கடல் நீச்சல் விளையாடுவதற்காக சென்றனர். அந்த குழுவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 48 -வயது பெண் ரோஹினா பந்தாரி என்பவரும் இடம்பெற்றிருந்தார். இவர் டபில்யூ.எல். ரோஸ் & கோ நிறுவனத்தின் மூத்த இயக்குனராக பணியாற்றி வந்தார்.

அவர்கள் சென்ற பகுதி அதிக அளவிலான சுறாக்கள் காணப்படும் பகுதியாகும். இந்நிலையில், ரோஹினா பந்தாரி நீச்சல் விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது ஒரு புலி சூறா அவரை தாக்கியது. இதையடுத்து அவரது பயிற்சியாளர் அவரை காப்பாற்ற முயற்சி செய்தார். அப்போது அவரையும் சுறா தாக்கியது.

இந்த தாக்குதலில் இருவரும் பலத்த காயமடைந்தனர். ரோஹினா பந்தாரியின் கால்கள் துண்டிக்கப்பட்டன. இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ரோஹினா பந்தாரி நேற்று இறந்தார்.