சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த சீமான் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோருக்கு அரசியலில் விழும் அடியில், விஜய் உட்பட எந்த நடிகரும் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றக் கூடாது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக தெரிவித்தார்.

ரஜினியும் கமலும் எம்.ஜி.ஆர்-யை தூக்கி பிடிப்பதால் அந்த வாக்குகள் அதிமுகவிற்குத்தான் போய் சேரும். எம்.ஜி.ஆர். பிரபாகரன் மீது மதிப்பு வைத்திருந்தார். அதனால் நாங்கள் அவரை மதிக்கிறோம் மற்றபடி எம்.ஜி.ஆர். என்ன நல்லாட்சி கொடுத்தார். கல்வியையும் மருத்துவத்தையும் தனியாருக்கு கொடுத்தது எம்.ஜி.ஆர். முல்லை பெரியாறு உரிமையை கேரளாவிற்கு கொடுத்தது எம்.ஜி.ஆர்” என்று கூறினார்.

காமராஜர், கக்கன், முத்துராமலிங்கதேவர், இரட்டைமலை சீனிவாசன், பூலித்தேவன், தீரன் சின்னமலை போன்ற எங்கள் முன்னோர் யார் என்று இவர்களால் அதிகபட்சமாக இரண்டு நிமிடங்கள் பேசி விட முடியுமா? ஒன்றுமே தெரியாது. ஆனால் இந்த நாட்டை ஆட்சி செய்துவிட வேண்டும் என்று நினைத்தால் எவ்வளவு மோசமான செயல் இது.

மேலும் ரஜினிகாந்த் திரைப்படத்தை யாரும் குறை சொல்லவில்லையே. 71 வயதில் எதற்காக ஹீரோவாக நடிக்கிறீர்கள் என்று நாங்கள் கேட்கவில்லையே என கூறியுள்ளார் .