பொள்ளாச்சியில் ஃபேஸ்புக் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் இளம் பெண்ணுகளுக்கு நடந்த விபரீதம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன் மற்றும் வசந்தகுமார் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில், பல ஆண்டுகளாக இது போன்ற பல குற்றச்சமபவங்களை அரங்கேறி வந்தது தெரியவந்துள்ளது. மேலும் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், சுமார் 20 பேருடன் இந்த கும்பல் இயங்கி வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

குற்றவாளிகளுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது, இந்த நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கமும் தற்போது குரல் கொடுத்துள்ளது. அந்த வகையில், நடிகர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.