டெல்லி: குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவளித்த நாகாலாந்து மக்கள் முன்னணி எம்பியை அக்கட்சி சஸ்பெண்ட் செய்துள்ளது.

நாகாலாந்தில் உள்ள நாகாலாந்து மக்கள் முன்னணி மாநிலங்களவை எம்பியான கென்யே நாடாளுமன்றத்தில் சிஏஏவுக்கு ஆதரவாக வாக்களித்தார். அவரது இந்த செயல், அவர் சார்ந்த நாகாலாந்து மக்கள் முன்னணிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கோஹிமாவில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், அவரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான நகல்களும் ஊடகங்களுக்கு வினியோகிக்கப்பட்டன.

அதில் கூறப்பட்டதாவது: சிஏஏவுக்கு ஆதரவாக வாக்களித்தது பற்றி கென்யேவிடம் உரிய விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் அவர் அளித்த விளக்கத்தை கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு மற்றும் மத்திய கமிட்டி முன்பும் வைக்கப்பட்டது.

சிஏரவுக்கு ஆதரவாகவும், கட்சியின் தீர்மானத்துக்கு எதிராகவும் செயல் பட்டீர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டதால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதில் கூறப்பட்டு இருக்கிறது.