வேளாங்கண்ணி:  நாகை மாவட்டம் அன்னை வேளாங்கண்ணி மாதா பேராலயத்தின் திருவிழா கொடியேற்றம் ஆகஸ்டு 29ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ரோமன் கத்தோலிக் கிறிஸ்தவர்களின் புனித இடமாக கருதப்படும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங் கண்ணி மாதா பேராலயம் திருவிழா இந்த ஆண்டு ஆகஸ்டு 29ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. கொரோனா முடக்கம் காரணமாக,  வெளி இடங்களில் இருந்து பக்தர்கள் வருவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.  எளிமையான முறையில் திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதைத்தொடர்ந்து, செப்டம்பர் 7 ஆம் தேதி தேர் விழாவும், செப்டம்பர் 8 கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறும் என  கோடிவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.