மகாராஷ்டிர மாநிலம் மற்றும் மும்பை நகரத்தின் பெயரை நடிகை கங்கணா ரணாவத் கெடுத்து வருவதாக, நடிகையும், அரசியல் பிரமுகருமான நக்மா கூறியுள்ளார்.

கடந்த சில வாரங்களாகவே நக்மாவுக்கும் – கங்கணாவுக்கும் கருத்து மோதல் வெடித்துள்ளது.

ஒட்டுமொத்த பாலிவுட்டுக்கும் அவப்பெயரைக் கொண்டு வருகிறார். முதலில் வாரிசு அரசியல் என்று ஆரம்பித்தார். பின் பாலிவுட்டுக்குள்ளே இருப்பவர்கள் வெளியே இருப்பவர்களுக்கு எதிரானவர்கள் என்று சொன்னார். இதன்பின் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்றார். இதைக் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது” என்று நக்மா ட்வீட் செய்துள்ளார்.

தனது கட்சிக்கு ஏற்றாற்போல பேசுவதால் கங்கணா ரணாவத்துக்கு ஒய் பிரிவு பாதுகாப்பைக் கொடுத்துள்ளார். ஆனால், கங்கணா மும்பைக்கு எதிராகப் பேசுகிறார். பாலிவுட் மூலமாகப் புகழடைந்திருப்பவர் இன்று பாலிவுட்டைப் பற்றி, அவருக்கு அத்தனையையும் தந்திருக்கும் மும்பை நகரத்தைப் பற்றி அவதூறு பேசுகிறார்” என்று நக்மா கூறியுள்ளார் .