தான்கோட்

ங்கியில் நிர்வாணமாக நுழைந்த ஒரு திருடன் பணத்தை எடுக்காமல், காலணியையும் பாத்திரங்களையும் திருடிச் சென்றது பரபரப்பை   உண்டாக்கியது.

பதான்கோட்டை சேர்ந்த ஜுகியல் என்னும் இடத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளை ஒன்று உள்ளது.  அதில் ஒரு கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது. வங்கியின் பின்புறச்சுவரில் ஒரு துளையிட்டு அதன் மூலம் திருடன் நுழைந்தது, அங்கிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது.

அந்த பதிவின் படி, விடியற்காலை 2.54 மணிக்கு ஒரு நிர்வாண திருடன் உள்ளே நுழைந்து, ஒரு மணி நேரம் கழித்து தன் கையில் ஒரு ஜதை ஷூ, இரண்டு ப்ரெஷர் குக்கர்கள், மற்றும் ஒரு தட்டுடன் அதே வழியில் திரும்பிச் சென்றது தெரிய வந்துள்ளது.  வங்கி வாட்ச்மேனின் உடமைகள் அவை.   பணம் எதுவும் கொள்ளை போகாமல் பத்திரமாக இருந்தது.

இந்த கொள்ளை பற்றி ரீஜனல் மேனேஜர் விபின் மித்தல் போலிசில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் அவர் கண்காணிப்பு காமிரா பதிவில் அந்தத் திருடன் பெட்டகத்தை உடைக்க முயற்சி செய்து முடியாமல் போனதாக பதிவாகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பதிவை கொண்டு திருடனை பிடிக்கும் முயற்சியில் போலீஸ் முனைந்துள்ளது.  அந்த திருடன் மனநிலை பிறழ்ந்தவனா என்னும் கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.