தி.மு.க தலைவர் கருணாநிதியை, கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு. மற்றும் முத்தரசன் ஆகியோர் இன்று சந்தித்தனர்.

தி.மு.க-வின் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதி, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த பல மாதங்களாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி, தனது கோபாலபுரத்து இல்லத்திலேயே ஓய்வெடுத்து வருகிறார். அவரை அரசியல் தலைவர்கள் பலர் சந்தித்து நலம் விசாரித்து வருகிறார்கள். சமீபத்தல் பிரதமர் மோடியும் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு  மற்றும் முத்தரசன் ஆகியோர் கருணாநிதியை அவரது கோபாலபுர இல்லத்தில் சந்தித்து  நலம் விசாரித்தனர்.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நல்லக்கண்ணு, `கருணாநிதியை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.  அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.  அவர்  என்னை அடையாளம் கண்டுகொண்டு புன்னகைத்தார்’ என்று தெரிவித்தார்.