சென்னை

மலுக்காக ஆதரவுக் குரல் கொடுக்கும் கட்சிகள் காலப்போக்கில் கைகழுவி விட்டு நடுத்தெருவில் நிறுத்தி விடுவார்கள் என்பதை கமல்ஹாசன் உணர வேண்டும்” என்று அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர். அறிவுரை கூறியுள்ளது.

அந்த இதழில் ,”திரிசங்கு சொர்க்கத்தில் நடிகர் கமல்” என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், “ அரசை எதிர்த்து ஆர்வக் கோளாறு காரணமாக கமல்ஹாசன் கருத்து தெரிவிப்பதை திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரிப்பதால், ஒட்டுமொத்த தமிழகமும் தனக்குப் பின்னால் இருப்பதாக கமல் கருதுகிறார். . உணர்ச்சிவசப்பட்டு அவர் செய்கின்ற செயல்களும், சொல்கின்ற கருத்துகளும் இப்போதைக்கு விளம்பரத்தை ஏற்படுத்தும் என்றாலும், பின்னால் எந்த அளவுக்கு பாதிக்கும் என்பது கமலுக்கு புரியவில்லை. கமலுக்காக ஆதரவுக் குரல் கொடுக்கும் கட்சிகள் காலப்போக்கில் கைகழுவி விட்டு நடுத்தெருவில் நிறுத்தி விடுவார்கள் என்பதை கமல்ஹாசன் உணர வேண்டும்” என்று  குறிப்பிடப்பட்டுள்ளது.