தனுஷ் தற்போது ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகு செல்வராகவனின் ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் ஷுட்டிங் தொடங்கப்படும் என்ற செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் , இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு துவங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. கடந்த பொங்கல் அன்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் செல்வராகவன்.