புதுடெல்லி:

முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை செலுத்துவதில்லை என அவரது பேரன் என்வி. சுபாஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.


முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் பேரன் என்வி.சுபாஷ் பாஜகவில் இணைந்துள்ளார்.
நரசிம்மராவின் பிறந்தநாளையொட்டி,அவரது சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு வந்த சுபாஷ் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் 98-வது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்த காங்கிரஸ் தலைவர்கள் மறந்துவிட்டனர்.
பாஜக, டிஆர்எஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் மரியாதை செலுத்தினர்.

தெலங்கானா காங்கிரஸ் தலைவர்கள்கூட மறந்துபோனது தான் வேதனை அளிக்கிறது.
கடந்த 1996-ம் ஆண்டுக்குப் பிறகு, பல்வேறு பிரச்சினைகளால் நரசிம்மராவை காங்கிரஸ் கட்சி ஓரம்கட்டியது.

நேரு குடும்பத்தைச் சாராதவர்கள் உயர் பொறுப்புக்கு வருவதை அவர்கள் விரும்பவில்லை. அதனாலேயே நரசிம்மராவை ஓரம் கட்டினர். அவருக்கு செலுத்த வேண்டிய மரியாதையை காங்கிரஸ் கட்சி முற்றிலும் புறக்கணித்து வருகிறது.

இதற்காக சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் மன்னிப்பு கேட்கவேண்டும். அவரது பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும்.

இதையெல்லாம் பார்க்கும்போது, அவர்கள் எவ்வளவு எதேச்சகரமானவர்கள் என்பது தெரிகிறது என்றார்.