உய்யாலவாடா நரசிம்மா ரெட்டியின் குடும்பத்தினர் சை ரா நரசிம்மா ரெட்டி தயாரிப்பாளர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

நரசிம்மா ரெட்டியின் சுதந்திரப் போராட்டத்தை மையமாக வைத்து சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா தயாரித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இந்தப் படம் அக்டோபர் 2-ம் தேதி வெளியாகவுள்ளது.

நரசிம்மா ரெட்டி பற்றிய தகவல்களைத் தங்களிடமிருந்து பெற்றுவிட்டு அதற்காகத் தருவதாகச் சொன்ன பணத்தைத் தராமல் ஏமாற்றிவிட்டார்கள் என்று நரசிம்மா ரெட்டியின் குடும்பத்தினர் கிட்டத்தட்ட 23 பேர் தற்போது குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், இந்த 23 பேரும் தலா 2 கோடி வீதம் மொத்தம் ரூ.50 கோடி வரை பணம் தர வேண்டும் என படத்தின் தயாரிப்பாளர் ராம் சரண் தேஜாவிடம் நிர்பந்தித்துள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, ஒருவரின் இறப்புக்கு 100 வருடங்கள் கழித்து, யார் வேண்டுமானாலும் அந்த நபர் பற்றி படம் எடுக்கலாம் என்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.