உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டிருக்கிறது. இதில் இந்திய பிரதமர் மோடிக்கு 9வது இடம் கிடைத்திருக்கிறது.

அமெரிக்காவின் பிரபல இதழ் ஃபோர்ப்ஸ் ஆகும். இந்த இதழ் வர்த்தகம், தொழில், முதலீடு, விற்பனை, உடல்நலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களைத் திறமைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து வருடாவருடம் பட்டியல் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2018-ம் ஆண்டிற்கான உலகின் சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியலை இன்று வெளியிட்டிருக்கிறது.

இந்த பட்டியலில் 75 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில், முதல் இடத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பின்னுக்குத் தள்ளி  சீன அதிபர் ஜி ஜின்பிங் பிடித்திருக்கிறார்.  ரஷ்ய அதிபருக்கு இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

ஒன்பதாவது இடத்தை இந்திய பிரதமர் மோடி பிடித்திருக்கிறார்.

“உலகில் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில், ‘மிகவும் பிரபலமான மனிதராக மோடி திகழ்கிறார்.  கடந்த 2016-ம் ஆண்டில் கறுப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு ஏதிராக மோடி அரசு எடுத்த நடவடிக்கைகள் துணிச்சலானது” என்று தெரிவித்துள்ளது  ஃபோர்ப்ஸ்.

இந்த பட்டியலில்  ஃபேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க் 19-வது இடத்திலும், இங்கிலாந்து பிரதமர் தெரசா மே 14-வது இடத்தையும் பிடித்திருக்கிறார்கள்.