சேலம் மாவட்டத்தின் தங்கமகன்

நெட்டிசன் ஈசன் டி எழில் விழியன் முகநூல் பதிவு

பிரபல கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு அவரது சொந்த ஊரான சின்னப்பம்பட்டியில் செண்டை மேளம் முழங்க சாரட் வண்டியில் உற்சாக வரவேற்பு…!   வழிநெடுகிலும் பொதுமக்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நடராஜன் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கியதை யடுத்து அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது இதனை முறையாக பயன்படுத்திக் கொண்ட நடராஜன் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று தனது முத்திரையை பதித்தார்.

[youtube https://www.youtube.com/watch?v=pERicM-X6Bo][youtube https://www.youtube.com/watch?v=Z6cAzQwdKL0]

இதனால் முன்னணி வீரர்களில் உள்ளத்தில் இடம்பிடித்த நடராஜனுக்கு உலகம் முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று இன்று தனது சொந்த ஊருக்கு வருகை புரிந்த நடராஜனுக்கு கடை வீதியில் இருந்து பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 

இரண்டு குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் செண்டை மேளம் முழங்க மேளதாளத்துடன் ஆயிரக்கணக்கான மக்களிடையே அவர் வாகனத்தில் இருந்தபடி கையை அசைத்து அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் ஊர்வலமாக வந்தார்.

வழி நெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் அவரை வரவேற்க நெடு நேரம் காத்திருந்து நடராஜனை வரவேற்றனர் இதனால் சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி கிராமம் விழாக்கோலம் பூண்டுள்ளது…!