சென்னை: தேசியக்கொடி அவமதிப்பு வழக்கில், தான் கைது செய்யப்படலாம் என அஞ்சிய  நடிகர் எஸ்வி சேகர், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்த நிலையில், இன்று திடீரென மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் சரணடைந்தார். ஆனால், காவல் துறையின் விசாரணைக்காக அவர்  ஆஜராகி இருப்பதாக கூறப்படுகிறது.
தேசிய கொடியைஅவமதித்ததாக தனியார் ஒருவர் நடிகர் எஸ்.வி.சேகர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் மனு  அனுப்பி இருந்தார். இந்த மனு மீது