டில்லி:

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மற்றும் இதர சம்பவங்கள் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தனிப்பட்ட விசாரணை மேற்கொள்ளவுள்ளது.

இந்த விசாரணைக்கு எஸ்பி தலைமையில் 3 டிஎஸ்பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய குழுவை அமைத்து உண்மை கண்டறியும் விசாரணை நடத்த உதவ வேண்டும் என்று தமிழக டிஜிபி.க்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதோடு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், நேரில் பபர்த்த சாட்சிகள் உள்ளிட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தி 2 வாரகாலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது.