கொல்கத்தா: பாஜக தேசிய தலைவர் நட்டா கொரோனா தொற்றில் இருந்து விரைவில் குணமடைய வேண்டும் என்று மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி தெரிவித்து உள்ளார்.

பாஜகவின் தேசிய தலைவரான ஜெ.பி. நட்டாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் குணம் அடைய பல்வேறு அரசியல் கட்சியினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், அவர் குணம் அடைய வேண்டும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி உள்ளதாவது:

பாஜக தேசிய தலைவர் நட்டாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று கேள்விப்பட்டேன். அவர் விரைவில் அந்த பாதிப்பில் இருந்து  குணம் பெற வாழ்த்துகிறேன். அவருடனும், அவரது குடும்பத்தினருடனும் எமது பிரார்த்தனைகள் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.