சென்னை: யோகா, இயற்கை மருத்துவம் பட்டப்படிப்புகளுக்கு இம்மாதம் 15ந்தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ்நாடு அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சென்னை மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் 2020–-21ம் ஆண்டிற்கு பி.என்.ஒய்.எஸ். மருத்துவ பட்டப் படிப்பில் அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள், மேல்நிலைப் பள்ளி தேர்வில் முதன் நேர்வில் அறிவியல் பாடங்களை எடுத்து தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து இணையவழி மூலம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் 03.08.2020 அன்று முதல் வரவேற்கப்பட்டன.

விருப்பப் படிவத்துடன் கூடிய விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பினை எங்களது அலுவலக வலைதள “www.tnhealth.tn.gov.in” லிருந்து பதிவிறக்கம் செய்ய மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விருப்பப் படிவத்துடன் கூடிய விண்ணப்பப் படிவம் பெறுவதற்கான கடைசி நாட்கள் முறையே 28.-08.-2020 மற்றும் 31.-08.-2020 -லிருந்து 12ந் தேதி  இம்மாதம் 15ந் தேதி) முடிய மாலை 5.30 மணி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரமான வலைதள அறிவிக்கை, மேற்கண்ட பி.என்.ஒய்.எஸ். படிப்பிற்கான அரசு மற்றும் சுயநிதி சிறுபான்மையினர் / சிறுபான்மையினரற்ற யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளின் விவரம், தகவல் தொகுப்பேடு, விருப்பப் படிவத்துடன் கூடிய பொது மற்றும் சிறப்பு விண்ணப்ப பதிவிறக்கம் மற்றும் அவற்றின் கட்டணம், குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள், இடஒதுக்கீடு விதிமுறைகள், படிப்புகளின் விவரம், சிறப்பு பிரிவினர், அடிப்படைத் தகுதி, கல்விக்கட்டணம் மற்றும் இதர விவரங்களுக் www.tnhealth.tn.gov.in என்ற வலைதளத்தை தொடர்புக் கொள்ளலாம்.

1. விருப்பப் படிவத்துடன் கூடிய விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பினை பதிவிறக்கம் செய்ய கால நீட்டிப்பு செய்யப்பட்ட கடைசிநாள் நேற்றுடன் முடிவடைந்தன.

2. பூர்த்தி செய்யப்பட்ட விருப்பப் படிவத்துடன் கூடிய விண்ணப்பப் படிவம் தபால் / கூரியர் சேவை வாயிலாக பெறவோ, நேரில் சமர்ப்பிக்கவோ கால நீட்டிப்பு செய்யப்பட்ட கடைசி நாள் இம்மாதம் 15ந் தேதி முடிய மாலை 5.30 மணிவரை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.