நவராத்திரி -50 குறிப்புகள் பகுதி 4
நவராத்திரி பற்றிய 50 சிறு குறிப்புகளில் 31-40 வருமாறு
- நவராத்திரிவிரதம் இருப்பவர்கள் தரையில் தான் படுத்துத் தூங்க வேண்டும்.
- அம்பிகைசங்கீதப் பிரியை. எனவே நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாட்டாவது பாட வேண்டும்.
- நவராத்திரி 9 நாட்களும் மகா சக்தியை ஐதீகப்படி வணங்கினால் முக்திப் பேறு உண்டாகும்.
- நவராத்திரி கோலத்தைச் செம்மண் கலந்து போட்டால் அம்பாள் மனமகிழ்ந்து வருவார்.
- நவராத்திரி 9 நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும்.
- கொலுவைத்திருப்பவர்கள் அதன் முன் நவக் கிரக கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும்.
- நவராத்திரி9 நாட்களும் வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்குப் பரிசுப் பொருட்களுடன் பூந்தொட்டி, புத்தகத்தைத் தானமாகக் கொடுக்கும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாகச் சென்னையில் அதிகரித்துள்ளது.
- முத்தாலத்திஎன்றொரு வகை கோலம் உள்ளது. நவராத்திரி நாட்களில் இந்த வகை கோலம் போட்டால் அம்பாள் அருள் நமக்கு எளிதாகக் கிடைக்கும்.
- நவராத்திரி 9 நாட்களில் வரும் வெள்ளிக் கிழமையன்று 5 சுமங்கலிப் பெண்களுக்கு அன்னதானம் செய்து புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால் உடனடியாக திருமணம் கைகூடும்.
- நவராத்திரி 5-ம் நாள் லலிதாம்பிகையின் அவதார தினமாகக் கொண்டாடப்படுகிறது. அன்று 9 சிறுமிகளுக்குப் பட்டுப்பாவாடை தானம் செய்தால் நினைத்தது நடக்கும்.