தமிழ் மற்றும் தெலுங்கு சின்னத்திரை தொடர்களில் பிரபலமான நடிகை நவ்யா சுவாமிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தலைவலி தொடர்ந்து இருந்ததால் மருத்துவரின் அறிவுரையின் பேரில் கோவிட்-19 பரிசோதனை மேற்கொண்டுள்ளார். இதில் அவருக்குக் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நவ்யா தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
https://www.instagram.com/p/CCGjd7UDwh2/
இதுகுறித்துப் பேசியுள்ள நவ்யா, “கொரோனா இருப்பது தெரிந்த அன்று இரவு நான் அதிகம் அழுதேன். விடியும் வரை அழுதேன். என்னால் உறங்க முடியவில்லை. என் அம்மா இன்னும் அழுதுகொண்டிருக்கிறார். என் செல்போனில் அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. என் வாட்ஸ் அப் முழுவதும் அறிகுறிகள், சிகிச்சை குறித்து செய்திகள் எக்கச்சக்கமாகக் குவிந்துள்ளன. எல்லாம் குழப்பமாக உள்ளது. எனது சக நடிகர்கள், குழுவுக்குத் தேவையில்லாமல் பிரச்சினை தந்திருக்கிறேனா என குற்ற உணர்வாக உள்ளது” என்று நவ்யா கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ள நவ்யா, இது உடல்ரீதியான போராட்டம் என்பதை விட மனரீதியான போராட்டமாகத்தான் இருக்கிறது என்று கூறியுள்ளார்.