‘நானும் ரெளடிதான்’ வெற்றியை தொடர்ந்து மறுபடியும் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்க முடிவெடுத்துள்ளார் விக்னேஷ் சிவன்.

லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்துக்கு ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டது. ஆனால் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை .

விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் நடிக்கின்றனர். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு காதலர் தினத்தை முன்னிட்டு (பிப்ரவரி 14) இன்று வெளியாகியுள்ளது.

இவர்களுடன் இணைந்து நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.