நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மிலண்ட் ராவ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் . இது நயன்தாராவின் 65வது படம்  . இந்த படத்திற்கு ’நெற்றிக்கண்’ என்ற டைட்டில் சூட்டப்பட்டுள்ளது.

த்ரில், சஸ்பென்ஸ் மற்றும் விறுவிறுப்பான கதை அம்சம் கொண்ட இந்த படத்தில் நயன்தாரா இதுவரை நடித்திராத ஒரு கேரக்டரில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

நயன்தாரா மாற்றுத் திறனாளியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படம் ‘பிளைண்ட்’ என்ற கொரிய மொழி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.