ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் நாள் (இன்று) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் வருமான வரித்துறை மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் அதிகாரம் குறித்த விழிப்புணர்வு பேரணி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது.

சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற இந்த பேரணியை நடிகை நயன்தாரா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.