சோனி தொலைக்காட்சியில் ‘’கான் பனேகா குரோர்பதி (கோடீஸ்வரன்) நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இப்போது 12-வது சீசன் நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கியது.

இந்த 12 –வது சீசனில், முதன் முறையாக டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் ஒரு கோடி ரூபாய் பரிசு பெற்றுள்ளார்.

நசியா நசீம் என்ற அந்த பெண் ராயல் என்பீல்டு நிறுவனத்தில் தகவல் தொடர்பு மேலாளராக பணி புரிந்து வருகிறார். இந்த நிகழ்ச்சி வரும் 11 ஆம் தேதி ஒளிப்பரப்பாகிறது.

“கஷ்டமான கேள்விகளுக்கும் வெகு எளிதாக நசியா பதில் அளித்தார்” என இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார்.

“வாழ்க்கையில் சாகசங்கள் செய்தே உயர்ந்த நிலைக்கு வந்துள்ளேன். இதுவும் ஒரு சாகசமே” என நசியா குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சீசனில் நான்கு பேர் ஒரு கோடி ரூபாய் பரிசு பெற்றுள்ள நிலையில், இந்த முறை முதன்முறையாக பெண் ஒருவர் ஒரு கோடி ரூபாய் பரிசை அள்ளிச்சென்றுள்ளார்.

– பா.பாரதி