தமிழ்த் திரையுலகில் திருமணம் என்னும் நிக்காஹ் என்னும் படத்தில் முதல் முதலாக ஒப்பந்தம் ஆனவர் நஸ்ரியா.   மலையாளப் பெண்ணான இவர் அந்தப் படம் வரும் முன்பே நேரம், நையாண்டி, ராஜா ராணி போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார்.   மலையாள நடிகரும்,  பூவே பூச்சூடவா புகழ் இயக்குனர் ஃபாசிலின் மகனுமான ஃபகத் ஃபாசிலை திருமணம் செய்துக் கொண்டு திரையுலகை விட்டே விலகினார்.  அவர் முதலில் ஒப்பந்தமான தமிழ்ப் படம் அவரது கடைசி தமிழ்ப்படமாக வெளி வந்தது.

பல நாட்களுக்குப் பின் தற்போது நஸ்ரியா ஒரு மலையாளப் படத்தில் பிருத்விராஜ் உடன் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.  இந்த மலையாளப் படத்தை அவர் முன்பு நடித்த “பெங்களூர் டேஸ்” படத்தை இயக்கிய அஞ்சலி மேனன் இயக்க உள்ளார்.   அத்துடன் தமிழிலும் நஸ்ரியா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.   இயக்குனர் ரா. கார்த்திக்கின் கைவண்ணத்தில் உருவாகும் இப்படத்தில் அவர் துல்கர் சல்மானுக்கு இணையாக நடிக்க இருப்பதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.