டெல்லி: மாநிலங்களவை துணைத் தலைவராக ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த ஹரிவன்ஸ் தேர்வு செய்யப்பட்டதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.

நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த ஹரிவன்ஸ் நாராயண் சிங் போட்டியிட்டார். எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராக, ராஷ்ட்ரிய ஜனதா தள எம்.பி., மனோஜ் ஷா போட்டியிட்டார்.

வாக்கெடுப்புக்கு பிறகு மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஹரிவன்ஸ் குரல் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

ஹரிவன்ஸ் சபையின் துணைத் தலைவராவது 2வது முறையாகும் என்றும் அவரை வாழ்த்துகிறேன் என்று காங்கிரசின் மூத்த தலைவரும், அக்கட்சியின் மாநிலங்களவை எம்.பி. யும் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.