சென்னை: தமிழகத்தில் இன்று புதியதாக 2,504 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுகாதார துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் இன்று புதியதாக 2,504 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,27,026 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 30 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

இதையடுத்து, ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 11,152 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் இன்று 3,664 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். ஆகையால் ஒட்டு மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,94,880 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 20,994 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.