காரைக்கால்:
காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு (தனி) தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாரிமுத்துவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதில் பல்வேறு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களும் தொற்றின் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தனித் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அ.மாரிமுத்துவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.