புதுச்சேரி: நிவர் புயல் பாதிப்பு தொடர்பாக முதற்கட்டமாக ரூ. 100 கோடி நிவாரணம் தருமாறு மத்திய அரசை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், நிவர் புயலால் புதுச்சேரியில் ஏராளமான வீடுகள், சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஆகையால் இடைக்கால நிவாரணமாக ரூ. 100 கோடி வழங்க வேண்டும். இந்த நிவாரணம் நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வழங்க வேண்டி இருக்கிறது என்று குறிப்பிட்டு உள்ளார்.

புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு திங்கள்கிழமை புதுச்சேரி வருகிறது. இந் நிலையில் முதலமைச்சர் நாராயணசாமி ரூ.100 கோடி கேட்டு கோரிக்கை கடிதம் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.