அரியலூர்,

நீட் தேர்வு  காரணமாக தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்நிலையில், தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் சொந்த மாவட்டமான அரியலூர் ரெயில் நிலையம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அரியலூர் ரெயில் நிலையத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ரெயில் நிலைய மேலாளருக்கு வந்த கடிதத்தில், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யும் வரை அரியலூர் ரெயில் நிலையத்தில் மாதம் ஒரு ரயில் குண்டு வைத்து தகர்க்கப்படும் மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

இந்த மிரட்டல் கடிதம் காரணமாக அங்கு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மிரட்டல் கடிதம் குறித்து அரியலூர் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.