சென்னை: நீட் தோ்வுக்கான பயிற்சிகள் ஜூன் 2ம் வாரத்திலிருந்து தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
2020-21ம் கல்வியாண்டுக்கான மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பது தொடர்பான அறிவிப்பு கடந்த ஆண்டு  டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமையான என்டிஏ நடத்துகிறது.
கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அதன் காரணமாக கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள், பயிற்சி மையங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
ஊரடங்கால் மே மாதம் நடைபெறும் நீட் தேர்வுக்கு தயாராவதில் மனரீதியாக பாதிப்பு இருப்பதாகவும், தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் மாணவர்களும், பெற்றோரும் கோரிக்கை விடுத்து இருந்தனர். அந்த கோரிக்கையை ஏற்று மே  3ம் தேதி நடைபெறுவதாக இருந்த நீட் தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: நீட் தேர்வுக்கான பயிற்சிகள் ஜூன் மாதம் 2ம் வாரத்திலிருந்து தொடங்கவுள்ளது.
மொத்தம் 7,300 மாணவர்களுக்கு 9 கல்லூரிகளில் 35 நாட்களுக்கு நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படும். பள்ளிகள் திறப்பு எப்பொழுது என்பது, சூழ்நிலைக்கேற்ப விரைவில் அறிவிக்கப்படும் என்று செங்கோட்டையன் கூறினார்.