டில்லி:

நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்காக நடத்தப்பட்ட  நீட் தேர்வின் முடிவுகள் வெளியிடப்படுவ தாகவும்,  இன்று மதியம் 2 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் க சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்து உள்ளது.

2018-19-ம் ஆண்டு மருத்துவ  மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை (நீட்) கடந்த மே மாதம் 6ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வை  தமிழகம் முழுவதும் இருந்து 1 லட்சத்து 10ஆயிரம் மாணவ மாணவிகளும்,. நாடு முழுவதும் இருந்து 13 லட்சம் மாணவ மாணவிகளும் எழுதி உள்ளனர்.

நடைபெற்று முடிநத  நீட் தேர்வுக்கான விடைகள் பட்டியல் சிபிஎஸ்இ இணையதளத்தில் கடந்த 25ம் தேதி வெளியிடப்பட்டன.

இந்த நிலையில் தேர்வு முடிவுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி இன்று மதியம் 2 மணிக்கு  நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www. cbseneet.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.