சென்னை:
ரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 15ந்தேதி  முதல் நீட் தேர்வுக்காக இணைய வழியில் இலவச பயிற்சி அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கால் +2 தேர்வு எழுதிய அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அரசு வழங்கும் இலவச நீட் பயிற்சி வழங்க முடியாமல் இருந்து வந்தது. தற்போது ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இணையவழி பயிற்சி வகுப்புகள் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி ஜூன் 15 முதல்  தனியார் பயிற்சி நிறுவனம் மூலம் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ மாணவிகளுக்கு 4 மணி நேரம் பயிற்சி வகுப்பும், 4 மணி நேரம் ஆன்லைன் மூலம் பயிற்சி தேர்வு என நடைபெற உள்ளது.
விருப்பமுள்ள மாணவர்கள் இன்று முதல் இணையவழியில் பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் தெரிவிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.