டில்லி,
ரும் கல்வி ஆண்டு முதல் நாடு முழுவதும்  ‘நீட்’ (NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST)  எனப்படும் மருத்துவ நுழைவு தேர்வு கட்டாய மாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்து உள்ளார். ஆனால் தமிழக அரசின் நிலை என்ன என்பது குறித்து எந்தவிதமான தகவலும் இல்லை.
இந்த தேர்வு காரணமாக தமிழக மாணவர்களின் டாக்டர் கனவு காணல்நீராகிவிடுமோ என்று அச்சப்பட வைக்கிறது.
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவப் படிப்பு சேர்க்கைக்காக தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்து வதற்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
நீட் தேர்வு மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயல் என அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற னர்.
அடுத்த ஆண்டு முதல், ‘நீட்’ எனப்படும், மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்விக்கான பொது நுழைவுத் தேர்வு  நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது மத்திய அரசு திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது. பாராளுமன்ற இரு அவைகளிலும் மசோதா நிறை வேறியதை தொடர்ந்து, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார்.
1neet
இதன் காரணமாக தமிழக மாணவர்களும், அடுத்த ஆண்டு முதல் மருத்துவக்கல்வி படிக்க “நீட்” (NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST) எனப்படும் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் ஆகிறது. 
இந்த தகுதித்தேர்வு காரணமாக கிராமப்புறங்களில் படிக்கும்  மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். நாட்டின்  பெரும்பாலான மாநிலங்களில் மத்தியஅரசின் சிபிஎஸ்சி  கல்வி பாடத்திட்டமே பயிற்றுவிக்கப்படுகிறது.
தமிழகம் போன்ற ஒருசில மாநிலங்களில் மட்டுமே சமச்சீர் கல்வி என்று தனிப்பாடத் திட்டம் உள்ளது. இதன் காரணமாக தமிழக மாணவர்கள் ‘நீட்’ போன்ற அனைத்திந்திய தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத நிலை ஏற்படுகிறது.
இதுகுறித்து ஆகஸ்டு மாதம் நடைபெற்ற தமிழக சட்டசபை கூட்டத்தின்போது, தமிழக எதிக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்விக்கு பதில் அளித்த தமிழக கல்வி அமைச்சர் அன்பழகன்,
neet-exam
நீட் பொது நுழைவுத் தேர்வை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. 9-6-2005-ல், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். சேர்க்கையை நடத்துவதற்கான அரசாணையைப் பிறப்பித்ததே முதல்வர் ஜெயலலிதாதான்.
எந்தக் காலத்திலும் தமிழ்நாட்டில மருத்துவ நுழைவுத் தேர்வு அனுமதிக்கப்படாது.
ஒருபுறம் சட்டப் பேராட்டம், மறுபுறம் மத்திய அரசை அணுகி நீட் தேர்வு தமிழகத்தில் அமலாக்குவதைத் தடுப்பது என்ற கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்றார்.
 
ஆனால் மத்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவோ, வரும் கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.  மேலும்  அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வரும் கல்வியாண்டில் நீட் தேர்வு மூலம் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை தமிழகத்தில் நடைபெற்றால், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மருத்துவ இடங்களை வெளிமாநில மாணவர்களே ஆக்கிரமிக்கும் சூழ்நிலை உருவாகும்.
இதுகுறித்து தமிழக அரசு என்ன முடிவு எடுக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால், தமிழக மாணவர்கள், குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் , மருத்துவம் படிப்பது என்பது கனவாகி விடும்  நிலை உருவாகி உள்ளது.  இதுவரைக்கும் தமிழக அரசு சார்பில் நீட் தேர்வு குறித்து எந்தவிதமான முயற்சியும் எடுக்கப்பட வில்லை என்று தெரிகிறது.