டில்லி:

நீட் தேர்வு முடிவுகளை தேசிய கல்வி முகமை வெளியிட்ட நிலையில், தமிழகத்தில் முதலிடம் பிடித்த சுருதி தேசிய அளவில் 57வது இடத்தை பிடித்துள்ளார்.

ருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மாதம் 5 தேதி நாடு முழுவதும்  நடைபெற்றது. ஒடிசா உள்பட சில இடங்களில் மட்டும் ஃபானி புயல் காரணமாக கடந்த மே மாதம் 20ம் தேதி நடத்தப்பட்டது.

இந்த ஆண்டு நீட் தேர்வை மொத்தம் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் நீட் தேர்வை எழுதினர். இதற்காக மொத்தம் 154 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், நீட் தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1.40 லட்சம் பேர் தேர்வெழுதி உள்ளனர். அவர்களில் தமிழகத்தில் 48.57% பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 9.01 சதவீதம் அதிகமாகும்.

நாடு முழுவதும், நீட் தேர்வு எழுதியவர்களில் 74.92% மாணவ மாணவிகள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

தமிழகத்தை பொருத்தவரையில் மொத்தம் 1.40 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 59,785 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் 50 இடங்களில் தமிழக மாணவர்கள் யாரும் இல்லை.

தேசிய அளவில் 57-ஆவது இடம் பிடித்த ஸ்ருதி என்ற மாணவி தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளார். இவர் 720 மதிப்பெண்ணுக்கு 685 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

மாற்றுத் திறனாளி பிரிவில் தமிழக மாணவர் கார்வண்ணபிரபு 575 மதிப்பெண்கள் பெற்று 5-ஆவது இடத்தை பெற்றுள்ளார். 

701 மதிப்பெண்களுடன் நளின் கந்தல்வால் என்ற ராஜஸ்தான் மாணவர் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.   டெல்லி, உத்தரப்பிரதேச மாணவர்கள் இருவர் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.

மாணவர்களில் நீட் தேர்வில் தேசிய அளவில் 56.50 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு எம்.பி.பிஎஸ் மருத்துவ படிப்பு உள்பட ஆயுர்வேதா, சித்தா, ஆயுஷ் உள்ளிட்ட படிப்புகளுக்கும் நீர்ட் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெற உள்ளது.

தேர்வு முடிவுகளை www.nta.ac.in, www.ntaneet.nic.in என்ற இணைய தளங்களில் அறிந்து கொள்ளலாம்.