சென்னை:

மிழகத்தில் நடைபெறும் அலட்சியக்கொலைகள் உடனே நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசை மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார்.

பேனர் விவகாரத்தில் இளம்பெண் சுபஸ்ரீ மரணம் அடைந்த நிலையில், அதை சுட்டிக்காட்டி பேசிய கமல்ஹாசன், அரசியல் கட்சியினரையும், அதிகாரிகளையும் கடுமையான சாடியுள்ளார்.

மேலும்,  தமிழகத்தில் அலட்சியக்கொலைகள் இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இரங்கல் தெரிவித்துக் கொண்டிருப்பதற்காக மட்டுமே நாம் இங்கு இல்லை. இதை நிறுத்தவைப்பது நமது கடமை. அரசின் அலட்சியம் அக்கறையாக மாற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

கமல் பேசும் வீடியோ…