சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது 110 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த கொரோனா தொற்றுக்கு இதுவரை 4200 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 24,000 பேருக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இந்தியாவில் 81 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. இதில் 64 இந்திய குடிமக்கள் மற்றும் 17 வெளிநாட்டினர் அடங்குவார்கள். 17 வெளிநாட்டினர்களில் 16 பேர் இத்தாலியர்கள் மற்றும் 1 கனடா நாட்டை சேர்ந்தவர்.

இப்படி கொரோனா வைரஸ் பீதியில் மக்கள் உள்ள நிலையில், அதிக சூரிய ஒளி இருந்தால் Corona Virus அழுத்தம் குறையும் என நடிகை நேகா சர்மா தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு காணொளியை பகிர்ந்து கொரோனா வைரஸ் அழுத்தத்தை குறைக்க இதை செயுங்கள் எனக் கூறியுள்ளார்.