அண்டை நாடான நேபாளத்தில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கே.பி.சர்மா ஒளி பிரதமராக உள்ளார்.

கடந்த 20 ஆம் தேதி அவரது உத்தரவின் பேரில் நேபாள நாடாளுமன்றத்தை கலைத்து குடியரசு தலைவர் உத்தரவிட்டார்.

ஒளிக்கும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் புஷ்ப கமல் பிரசண்டாவுக்கும் இடையேயான மோதலே இதற்கு காரணம். பிரசண்டா, ஏற்கனவே பிரதமராக இருந்தவர் ஆவார்.

கே.பி.சர்மா – புஷ்ப கமல் பிரசண்டா

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியும் பிளவு பட்டுள்ளது.

இந்த நிலையில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு பிரிவினரிடயே காட்மண்டுவில் நேற்று உரை நிகழ்த்திய பிரசண்டா, “இந்தியாவின் தூண்டுதல் காரணமாக நாடாளுமன்றத்தை ஒளி கலைத்துள்ளார்” என குற்றம் சாட்டினார்.

“பிரதமர் ஒளி, காட்மண்டுவில் உள்ள தனது அலுவலகத்தில் இந்திய உளவுத்துறையான ‘ரா’ தலைவர் கோயலுடன் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் இருவர் தவிர வேறு யாரும் இல்லை” என்றும் பிரசண்டா தெரிவித்தார்.

– பா. பாரதி