காத்மண்டு

மாதவிடாய் காலத்தில் தனித்து விடப்படும் பெண்கள் பாம்பு தீண்டுதல், கடும் குளிர், சுட்டெரிக்கும் வெய்யில் என பல வித இன்னல்களுக்கு ஆளாகி இறந்து விடுகின்றனர் என ஒரு ஆய்வு கூறுகிறது.

நேபாளத்தில் மாதவிடாய் காலங்களில் பெண்கள் மாட்டுக் கொட்டகை அல்லது சிறிய ஷெட் போன்ற இடங்களில் தனித்து அடைக்கப்பட்டு விடுவது வழக்கம்.   நேபாளத்தின் இந்தக் கொடுமையான மாதவிலக்கானப் பெண்களை சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கும் இந்துமதக் கலாச்சராம் சௌபாடி(Chhaupadi) என்று அழைக்கப்படுகிறது.    இந்தப் பெண்கள் இயற்கையின் கடும் குளிர், சுட்டெரிக்கும் வெயில் ஆகியவற்றின் தாக்குதலாலும், பாம்புகளின் விஷப்பற்களாலும் மரணம் அடைகின்றனர்..

தற்போது ஒரு நேப்பாளத்தில் ஒரு சிறு கிராமத்தில் நடந்த ஒரு நிகழ்வு :

நேபாளத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் துளசி ஷாஹி.  ஒவ்வொரு மாதமும் அவருடைய மாதவிடாய் சுழற்சியின் போது அவரது மாமாவின் பசுமாட்டுக் கொட்டகையில் அடைக்கப்படுவது வழக்கம்,  அங்கு அவரை ஒரு விஷப்பாம்பு தீண்டியுள்ளது.  பாம்பு தீண்டியதற்கு பிறகு ஏழு மணி நேரம் உயிரோடிருந்தும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் உள்ளூர் மதகுருவிடம் அழைத்துச் சென்றதால் அநியாயமாக உயிரிழந்தார் துளசி.

இது குறித்து,  அரசு சுகாதார மையத்தில் பணிபுரியும் அவரது உறவுப் பெண்ணான கமலா ஷாஹி, “மூடநம்பிக்கையால் தான் துளசி உயிரிழந்தாள்.  முறையான மருத்துவம் அளித்திருந்தால் உயிர் பிழைத்திருப்பாள்: என கண்ணீருடன் தெரிவித்தார்,

காத்மண்டுவைச் சேர்ந்த பெண்கள் உரிமை செயற்பாட்டாளரான ராதா பாடல். ”தாயாகவும் தெய்வமாகவும் போற்றப்படும் இந்து மதப் பெண்களால். மதத்தின் பெயரால் நடக்கும் இந்தச் சமூக கொடுமையை ஏற்றுக் கொள்ளுவதைத் தவிர வேறு வழியேதும் இல்லை. நேபாளத்தில்  ஜனாதிபதியும் ஒரு பெண். மக்களவைத் தலைவரும் ஒரு பெண். தலைமை நீதிபதியும் ஒரு பெண்.  ஆனால், இவ்வளவு பேர் இருந்தும் கொட்டடியில் விலங்குகள் போல அடைபட்டு எங்களைப் போன்ற பெண்கள் இறந்து போகிறார்கள். இது வெட்கக்கேடானது” என்று கூறுகிறார்

இந்த இந்துமதத்தினரின் மூடப்பழக்கம் தான் துளசியின் உயிரை பறித்தக் குற்றவாளி என்பது வெளிப்படை நிலைதான்.

ஆனால் இதற்காக  யாரைத் தண்டிப்பது?

துளசியைப் போன்ற பெண்களின் தாய் தந்தையரையா?  இல்லை தொன்று தொட்டு இந்தக் கொடுமையை நடத்தி வரும் பார்ப்பனிய இந்துமதத்தின் புனிதத்தையா?  இல்லை புனிதத்தைத் தலைமைத் தாங்கும் மதகுருமாரையா?  இல்லை பாம்புக்கடிக்கு மருந்தில்லாமல் செய்த நேபாள அரசமைப்பையா?