கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை நேபாளத்தை சேர்ந்த 16வயது இளம் வீரர் முறியடித்துள்ளார். நேபாளத்தை சேர்ந்த ரோஜித் பவுடன் 16 வயதில் சர்வதேச அளவில் தனது முதல் அரைசதம் அடித்து சச்சினை மிஞ்சியுள்ளார்.

rohith

மிகவும் இளம் வயதில் சர்வதேச அளவிலான போட்டியில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுகல் படைத்திருந்தார். 16 வயது 213 நாட்கள் நிரம்பிய சச்சின் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதல் அரைசதத்தை அடித்தார். இளம் வயதில் சர்வதேச போட்டியில் அரைசதம் அடித்த சச்சினின் இந்த சாதனையே இதுவரை இருந்து வந்தது.

young

இந்நிலையில் நேபாள வீரர் ரோஹித் பவுடல் தனது 16 வயது 146 நாட்கள் இருக்கும் போது சச்சின் சாதனையை முறியடித்துள்ளார். ஐக்கிய அரபு அணிக்கு எதிராக போட்டியில் அரைசதம் கடந்த ரோஹித் சச்சின் சாதனையை தன் வசப்படுத்தியுள்ளார். இந்த போட்டியில் 58 பந்துக்களை எதிர்கொண்ட ரோஹித் 7பண்ட்ரிகள் விளாசி 55ரன்கள் எடுத்துள்ளார்.